மாஸ் காட்டும் இந்தியா…ஒரே நேரத்தில் போர் விமானம் மற்றும் போர்க்கப்பலிருந்து ஏவுகணை சோதனை!

ஒரே நேரத்தில் போர் விமானத்தில் இருந்தும் போர்க்கப்பலில் இருந்தும் இரு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி ஒரே இலக்கைத் தாக்கி இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

இந்திய விமானப்படையின் சுகோய் வகைப் போர்விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பயன்பாடற்றுக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலைத் துல்லியமாகத் தாக்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேபோல் ஐஎன்எஸ் டெல்லி

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையும், பயன்பாடற்ற கப்பலைத் துல்லியமாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு மூவாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சென்ற இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.