உக்ரைன் கல்லறையில் அருகருகே புதைக்கப்பட்ட பல உடல்கள்! ஒரு கல்லறை மேலே மட்டும் தெரிந்த முகம்… வீடியோ



உக்ரைனின் இர்பின் நகரின் புதிய கல்லறையின் காட்சிகள் வெளியாகி காண்போர் மனதை உலுக்கியுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி முதல் போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இரு தரப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்கள் பலர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

பல பெண்கள், சிறுமிகள் ரஷ்ய வீரர்களால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள இர்பின் நகரில் உள்ள கல்லறையில் கொத்து கொத்தாக சடலங்கள் அருகருகே புதைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைனில் பெண்களிடம் அத்துமீறிவிட்டு கொன்ற ரஷ்யர்களுக்கு வெகுமதியை வாரி இறைத்த புடின்! புதிய திடுக் தகவல்

புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலே மலர்வளையங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு கல்லறை மீது மட்டும் கொல்லப்பட்ட ஆண் ஒருவரின் முகம் அப்படியே பேப்பரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு கல்லறையில் இருந்து அவர் வெளியே பார்ப்பது போல அது உள்ளது.

இந்த வீடியோவை உக்ரேனிய எம்.பி லிசியா வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இர்பின் புதிய கல்லறையின் காட்சிகள் இவை, இதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.
ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரே கணத்தில் இவ்வளவு உயிர்கள் பறிபோய் விட்டதே என நினைக்க தோன்றுகிறது.
இனப்படுகொலையை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.