உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருந்து: அமைச்சர் ஆலோசனை| Dinamalar

புதுடில்லி : உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக மத்திய சுகாதாரஅமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்தின் ஜாம் நகரில் அமையவிருக்கிறது. இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிசை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து மாண்டவியா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ‘நம் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தை உலக மக்கள் நலனுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கலந்து பேசினோம்’ என கூறி உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.