கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. மனைவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பென்னிகுவிக் தெருவில் வசித்து வருபவர் பரணி. இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.