காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கடந்த 4 நாட்களில் 3 முறை பிரசாந்த் கிஷோர் ஆலோசனை

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களவைத் தேர்தலை சந்திப்பது குறித்து, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த நான்கு நாட்களில் 3 முறை இருவரும் சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத் ,திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக் ,கே.சி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ஏ.கே அந்தோணி, அம்பிகா சோனி உள்ளிட்டோரும் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கான செயல்திட்டத்தை கடந்த 16ந் தேதி சோனியாவிடம் பிரசாந்த் கிஷோர் அளித்ததாகவும், விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.