திரிபுராவில் பரவும் காய்ச்சல்; பன்றிகளை கொல்ல உத்தரவு| Dinamalar

அகர்தாலா : மிசோரம் மாநிலத்தை தொடர்ந்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையில், பா.ஜ., – திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து, தொற்று ஏற்பட்ட பன்றிகளை அழிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மாநில விலங்குகள் நல மேம்பாட்டு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:செபாஹிஜலா மாவட்டத்தில், அரசு நடத்தும் பண்ணையில் உள்ள, 60 பன்றிகள் திடீரென இறந்தன.இதையடுத்து, பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொற்று பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், ஆப்ரிக்க வகை பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் தொற்று பரவியுள்ள அனைத்து பன்றிகளையும் கொன்று புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.