தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க கூடாது: குமாரசாமி வேண்டுகோள்

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக ஜலதாரே ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி  நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர ராமர் பெயரை கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்தனர். தற்போது அதற்கு மாறாக ராவணன் போல் ஆட்சி செய்து வருகின்றனர். மக்கள் தங்களை வாழ விடுங்கள் என கூறும் வகையில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. ராமர் என்ன கூறியுள்ளார் என்பதை பா.ஜனதாவினர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பா.ஜனதா எதிர்வரும் சட்டசபை பொதுத் தேர்தலில் 150 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்க திட்டம் வகுத்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதாவை சேர்ந்தவர்களில் யாரை சிறைக்கு அனுப்பலாம் என திட்டம் தீட்டி வருகின்றனர்.

காங்கிரசும், பா.ஜனதாவும் நாட்டையை சீரழித்துவிட்டது. அதனால் பொது மக்கள் தேசிய கட்சிகளை ஆதரிப்பதை நிறுத்தி அக்கட்சிகள் ஆட்சி செய்வதற்கு அனுமதி வழங்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.