பணமோசடியில் வசமாக சிக்கிய நடிகர் விமல்…! தயாரிப்பாளருக்கு வந்த கொலை மிரட்டல்…!

பணத்தை திருப்பி கேட்டால்
கொலை
மிரட்டல் விடுப்பதாக நடிகர்
விமல்
மீது தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விமல்.
பாண்டியராஜ்
இயக்கத்தில் வெளியான ‘
பசங்க
’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பிறகு
களவாணி
, கேடி பில்லா கில்லாடி ரங்கா,
வாகை சூடவா
, கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘
விலங்கு
’ வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை

தற்போது பிசியான நடிகராக வலம் வரும் விமல் மீது சென்னை சேர்ந்த தயாரிப்பாளர்
கோபி
பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதில்,
மன்னர் வகையறா
படத்தை எடுத்தபோது நடிகர் விமல், என்னிடம் 5 கோடி ரூபாய் கடனாக வாங்கினார்.

அந்த பணத்தை வாங்கும்போது படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார்.ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை இதுவரை திருப்பி வழங்கவில்லை. சமீபத்தில் பணத்தை கேட்டால், திருப்பி வழங்க மறுப்பதோடு, கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார்.

அதனால் நடிகர் விமல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணம் 5 கோடியை வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.