பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது: ரம்புக்கனை கலவரம் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல் (PHOTO)



எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக அமையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாம் எந்த பக்கத்தில் இருந்தாலும் வன்முறை பிரச்சினைனகளுக்கு தீர்வு கிடையாது எனவும்,நமது நாடு போதியளவு வன்முறைகனை சந்தித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா நேரங்களிலும் சமாதானத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரிகளும் போராட்டக்காரர்களும் வன்முறை வழியில் செல்ல வேண்டாம் என தாம் கோரிக்கை விடுப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.