பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட மூவர்



பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் துப்பாகி வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியான நிலையில், வீடொன்றில் இருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், 60 வயது கடந்த ஆண் மற்றும் பெண் இருவரும், 50 வயது கடந்த ஆண் ஒருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும், கடுமையான தாக்குதல் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் தரப்பும் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட மூவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 9.55 மணியளவில் பொலிசாருக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், கொலை வழக்காக குறிப்பிட்டு, விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.