புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!

புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமைச் செலாளராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அஸ்வனி குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வந்தார். மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம்.

ஆனால், புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அஸ்வனி குமார் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இதற்கு பின்னால், பாஜகவின் திட்டம் உள்ளதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்தநிலையில், புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தலைமைச்செயலாளர் அஸ்வனி குமார் அனுமதி வழங்காமல் தடையாக இருப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. அண்மையில், தலைமைச் செயலாளரை மாற்றக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் செயலாளரான அஸ்வனி குமார் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அருணாசலபிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும்
ராஜீவ் வர்மா
ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்.24 ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வரவுள்ள நிலையில் அதிகாரி மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.