பெரு நாட்டில் ஒரே மாதத்தில் 5 டன்னுக்கும் மேலான போதை பொருட்கள் பறிமுதல்

பெரு நாட்டில் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் இதுவரை வெவ்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 5 டன்னுக்கும் மேலான போதை பொருட்களை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து போதை பொருள் தயாரிக்க வைத்திருந்த ரசாயனங்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், படகுகள், ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேலான போதை பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 900-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் சுமார் 25 போதை பொருள் மாஃபியா கும்பல்களை செயலிழக்கச் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.