பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரியா தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு; உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதை அடுத்து ரஷ்யா நடவடிக்கை

உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டியதாக பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளின் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அறிவித்த ரஷ்யா, ஆஸ்திரியா தூதரக அதிகாரிகளையும் வெளியேற உத்தரவிட்டது.

2 வாரத்திற்குள் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளின் தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரஷ்யா அதிகாரிகள் 38 பேரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து வெளியேற்றியதற்கு பழிக்குப் பழி வாங்கும் நிகழ்வாக ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நெதர்லாந்தின் 15 அதிகாரிகள், ஆஸ்திரியாவை சேர்ந்த 4 அதிகாரிகள் உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.