மீண்டும் முழு ஊரடங்கு: பிரதமர் மோடி எடுக்கப் போகும் முடிவு!

இந்தியா முழுதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகர் டெல்லி, தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, டெல்லி, தமிழகம் உள்ளிட்டவற்றில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில், டெல்லியில் மட்டும், 1,009 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது சுமார் 60 சதவீதம் அதிகமாகும். மேலும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையின்படி, கடந்த 11 ஆம் தேதி முதல், 18 ஆம் தேதி வரை, மாநிலத்தில் மூன்று மடங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொது மக்கள் கவலைப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக, நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், நாடு முழுதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் எனக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் உயரும் பட்சத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாவதை தவிர்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.