செங்கோட்டையில் குரு தேஜ் பகதூர் 400வது பிறந்த நாள் விழா.. நாணயம், அஞ்சல் தலை ஆகியவற்றை வெளியிடுகிறார் மோடி

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குரு பூரப் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இரவு 9.15 மணிக்கு உரையாற்றுகிறார்.

சீக்கியர் பத்து குருமார்களில் ஒருவரான குரு தேஜ் பகதூரின் 400 வது பிறந்த நாள் பிரகாஷ் பூரப் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்று மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

குருவின் நினைவாக நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட உள்ளார்.குரு தேஜ் பகதூரின் வாழ்க்கையை சித்தரிக்கும் பிரம்மாண்டமான ஒலி ஒளி காட்சியும் கலைநிகழ்ச்சிகளும் நாள் முழுவதும் நடைபெற உள்ளன.

முன்னதாக நேற்று செங்கோட்டை விழாவில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, நாட்டுக்காகவும் இந்துக்களின் உரிமைக்காகவும் போராடி முகலாயர் ஆட்சியில் மன்னர் அவுரங்கசீப் உத்தரவால் கொடூரமான மரண தண்டனை விதிக்கப்பட்ட குரு தேஜ் பகதூருக்கு  பிரதமர் மோடி விழா கொண்டாடி மரியாதை செய்து வருவதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.