குவாட் நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் 2 லட்சம் டோஸ்கள் தாய்லாந்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், அதனை விநியோகிக்கும் வகையிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் குவாட் அமைப்பின் மாநாட்டில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. இதன்படி, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கம்போடியாவிற்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது தாய்லாந்திற்கு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பரில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில், இந்தோ – பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தற்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.