தொழிலாளர் சேமநல நிதியத்தில் பிப்.,ல் 14.12 லட்சம் பேர் சேர்ப்பு| Dinamalar

புதுடில்லி : இந்தாண்டு பிப்ரவரியில் ‘இ.பி.எப்.ஓ.,’ எனப்படும் தொழிலாளர் சேமநல நிதியத்தில் புதிதாக, 14.12 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

இது குறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2021 அக்., முதல் தொழிலாளர் சேமநல நிதியத்தில் புதிதாக இணைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதை குறிக்கிறது. இந்தாண்டு பிப்.,ல் தொழிலாளர் சேமநல நிதியத்தில், 14.12 லட்சம் பேர் சந்தாதாரர்களாக ஆகியுள்ளனர். ஜனவரியை விட, பிப்.,ல், 31 ஆயிரத்து 826 பேர் அதிகமாக இணைந்துள்ளனர். பிப்.,ல் மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்கள், 67 சதவீத பங்களிப்புடன், 9.52 லட்சம் பேரை இணைத்து முன்னணியில் உள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.