பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

நியூயார்க்,
பிலிப்பைன்சின் மானாய் நகரில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மானாய் நகரின் கிழக்கு தென்கிழக்கு திசையில் 51 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 09.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியின் தரைப்பகுதியில் இருந்து 51.33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.