அடுத்தடுத்து நண்பர்கள் இறப்பு..விபரீத முடிவு எடுத்த பள்ளி மாணவன்?-திருப்பூரில் சோக சம்பவம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, நண்பர்கள் இறந்த சோகத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கணியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் வசித்து வருபவர் அக்ஷய்குமார்(வயது 16). இவரது தாய் தந்தை பிரிந்து வாழும் நிலையில், அக்‌ஷய், தனது தாயுடன் இருந்திருக்கிறார். தாய் கெளசல்யா மற்றும் தங்கையுடன் வசித்து வந்த அக்‌ஷய் குமார், மடத்துக்குளத்தில் வாடகை வீட்டில் இருந்தபடி, அதே ஊரை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி நேரம் போக பிற நேரங்களில் அருகிலிருந்த கறிக்கடையில் பகுதிநேர தொழிலாளியாக பணிபுரிந்தும் வந்துள்ளார் அக்‌ஷய்குமார்.
image
இந்நிலையில் இவருடன் வேலை செய்த வடநாட்டு இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இவருடன் படித்த சக மாணவனும் கடந்த மாதம் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார். நண்பர்கள் இருவரின் பிரிவால் ஏங்கி வந்தவர், அவ்வப்போது அவர்களின் புகைப்படங்களை பார்த்து கண்ணீருடன் வருந்தியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். தகவல் கிடைத்து விரைந்து வந்த கணியூர் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தி: தொடரும் மின்வெட்டு.. மின் அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு; பாதுகாப்பு கோரும் ஊழியர்கள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.