இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. தற்போது, 14,241 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,589 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,16,068 ஆனது.

நேற்று 54 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,22,116 ஆனது. நேற்று 18,03,558 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 187. 26 கோடி ஆனது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.