இந்தியாவை மீண்டும் பாராட்டும் இம்ரான் கான்| Dinamalar

லாகூர்: இந்தியாவின் வெளிநாட்டு கொள்ளை குறித்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் மீண்டும் இந்தியாவை பாராட்டி பேசியுள்ளார்.

பாக்.,கில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.

நேற்று லாகூரில் நடந்த பேரணியின் போது இம்ரான் கான் பேசியது, இந்தியா அமெரிக்கா வுடன் நல்ல நட்புடன் உள்ளது. ‘குவாட்’ அமைப்பிலும் இந்தியா உள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானங்கள் மீதான ஒட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது தான். இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.