கிருஷ்ணகிரியில் நெல் அரைக்கும் இயந்திரத்தில் பெண்ணின் தலைமுடி சிக்கியதால் விபரீதம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நெல் அரைக்கும் இயந்திரத்தில் பெண்ணின் தலைமுடி சிக்கியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் நேற்று இரவு  நெல்  அரைக்கும் இயந்திரத்தில் நெல்லை அரைத்துக் கொண்டு வருவதற்காக சென்றுள்ளார்.

அப்பொழுது அந்த இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமியின் தலைமுடி சிக்கிகொண்டது. இதனை அடுத்து இயந்திரத்தின் வேகத்துக்கு  இழுத்து செல்லப்பட்ட அவர் அதன் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.