கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுத்தம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புனே: கோவிட் தடுப்பூசிகள் விற்காமல் வீணாவதை தடுக்கும் விதமாக தடுப்பூசி உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

latest tamil news

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம், கோவிஷீல்டு மருந்தினை உற்பத்தி செய்து வந்தது. தற்போது இந்தியாவில் கோவிட் ஓய்ந்து மெதுவாக பரவத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் 20 கோடி கோவிஷீல்டு மருந்துக் குப்பிகள் விற்காமல் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இதனால் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது

latest tamil news

2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான காலை இடைவெளியை 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கும் படி ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையை ரூ 600லிருந்து ரூ 225 ரூபாயாக குறைத்துக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.