ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – பாதுகாப்பு படைவீரர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சுன்ஜ்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.