ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

ஜம்மு:
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு – காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்  பாரமுல்லா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.  இதில்  4 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜம்முவில் உள்ள சத்தா முகாம் அருகே இன்று மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். 
காலை பணிக்கு சென்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்புப் படை வீரர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.