Tamil news today live: மத்திய அரசு பணிகளில் சேர போலிச் சான்றிதழ்.. அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!


Petrol and Diesel Price:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu news update: கொரோனா தொற்று வடமாநிலங்களில் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக விசாரனை நடத்தினர்.

India News Update: இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டை முதன்மையானதாக கருதுங்கள்-பிரதமர் மோடி
முடிவு எடுக்கின்றபோது நாடுதான் முதன்மையானது என்ற அணுகுமுறையை பின்பற்றுங்கள் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பிரதமர்மோடி அறிவுரை வழங்கினார்.

World news update: உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.

Sports Update: தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிஎஸ்கே வெற்றி
மும்பை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி திரில் வெற்றியை ருசித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
11:40 (IST) 22 Apr 2022
பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.

11:10 (IST) 22 Apr 2022
மத்திய அரசு பணிகளில் சேர போலிச் சான்றிதழ்..

மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000-க்கும் மேலான சான்றிதழ்கள் போலி என்பது அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

11:01 (IST) 22 Apr 2022
காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை!

ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தகவல்.

11:00 (IST) 22 Apr 2022
ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை-அமைச்சர்

ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

10:45 (IST) 22 Apr 2022
தனியார் துறையுடன் இணைந்து வீடு கட்ட வேண்டாம்-ராமதாஸ் வலியுறுத்தல்

தனியார் துறையுடன் இணைந்து வீட்டுவசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். தனியாருடன் இணைந்து வீடுகளை கட்டினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவு விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10:33 (IST) 22 Apr 2022
நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும்-அமைச்சர் துரைமுருகன்

விழுப்புரம் மாவட்டம் நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

10:31 (IST) 22 Apr 2022
சசிகலாவிடம் 2ஆவது நாளாக விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் 2வது நாளாக இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. சென்னை, தி.நகரில் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

10:17 (IST) 22 Apr 2022
மே 8இல் மெகா தடுப்பூசி முகாம்

மே 8ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரணியன் தெரிவித்தார்.

10:16 (IST) 22 Apr 2022
மகாத்மா காந்தி நினைவிடத்தில் இங்கிலாந்து பிரதமர் அஞ்சலி

டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அஞ்சலி. போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.

09:55 (IST) 22 Apr 2022
தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

09:41 (IST) 22 Apr 2022
சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா!

சென்னை ஐஐடியில், 700 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி உறுதியாகியுள்ளது.

09:41 (IST) 22 Apr 2022
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஷ்டிரபதி வருகை!

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை, பிரதமர் மோடி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

09:11 (IST) 22 Apr 2022
திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் சங்கரன்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

09:09 (IST) 22 Apr 2022
“சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்துகள்” – அமைச்சர் சிவசங்கர் தகவல்

சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

08:47 (IST) 22 Apr 2022
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்? – டி.டி.வி.தினகரனிடம் விசாரணை

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.