நிடி அயோக் துணைத்தலைவராக சுமன் பெரி நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நிடி அயோக் துணைத்தலைவராக இருந்த ராஜிவ்குமார் திடீரென பதவி விலகியதை தொடர்ந்து, அந்த பதவிக்கு சுமன் கே பெரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார நிபுணரான ராஜிவ்குமார் கடந்த 2017 ம் ஆண்டு நிடி அயோக் துணைத்தலைவராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் ஏப்.,30 அன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு, ஏப்.,30 முதல் பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதித்துள்ளது.

latest tamil news

தொடர்ந்து, புதிய துணைத்தலைவராக சுமன் கே பெரியை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இவர், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு, புள்ளியியல் கமிஷன் மற்றும் பணக்கொள்கை தொடர்பான ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினராகவும் உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.