இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, வரும் 27 ஆம் தேதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, பிப்ரவரி மாதம் முதல் ஊரடங்கில் மாநில அரசுகள் தளர்வுகள் அளித்தன. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு, தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று காரணமாக அமைந்தது.

இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், டெல்லி, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முகக் கவசம் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, வரும் 27 ஆம் தேதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படக் கூடும் என, தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சுமார் 2,527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.