இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2527 பேருக்கு கோவிட் உறுதியானது. 1,656 பேர் குணமடைந்துள்ளனர். 33 பேர் உயிரிழந்தனர். தற்போது 15,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 4,26,17,724 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,22,149 ஆகவும் அதிகரித்தது.

தற்போது வரை மொத்தம் 187.46 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 19,13,296 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.