கொடநாடு வழக்கு விசாரணை ஜுன் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஜுன் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தனிப்படை போலீசார் மேலும் பலரிடம் விசாரணை நடத்த உள்ளதால் அரசுத்தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, விசாரணையை ஜுன் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.