சொந்த காரில் பயணிப்பவர்கள் வாகனத்திற்குள் முகக்கவசம் அணியத் தேவையில்லை – டெல்லி அரசு அறிவிப்பு!

தங்களது சொந்த காரில் பயணிப்பவர்கள் வாகனத்திற்குள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் விதிகளை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சொந்த கார்களில் முகக்கவசம் அணியாமல் ஒன்றாக பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.  முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை பாராட்டிய சுகாதாத்துறை நிபுணர்கள், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்காமல் இருந்தது தற்போதைய கொரோனா பாதிப்பு உயர்விற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.