வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்த தந்தை…கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகன்.!

கோவை மாவட்டம் புலியகுளம் அருகே, வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்த தந்தையை, மகனே கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்த கருப்பசாமி – வசந்தா தம்பதிக்கு சுரேஷ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ஓய்வுபெற்ற தூய்மை பணியாளரான கருப்பசாமிக்கு, புலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த வசந்தா, கருப்பசாமியை பிரிந்து வேறு பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கருப்பசாமி தனது ஓய்வூதிய பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் தன்னுடன் தவறான உறவில் இருந்த பெண்ணிடம் கொடுத்ததாகவும் பணத்தை கொடுக்கும் படி மகன் சுரேஷ் கேட்டும் அவர் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், மதுபோதையில் அந்த பெண்ணின் வீட்டு வாசலில் படுத்துக் கிடந்த கருப்பசாமியை நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார், சுரேஷை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.