காதலில் விரிசல்…காதலியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட காதலன்; கம்பி என்னும் பரிதாபம்!

கன்னியாகுமரியில், காதலை கைவிட்ட ஆத்திரத்தில் காதலியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் சில தினங்களுக்கு முன் அந்த பெண் திடீரென, காதலை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித், காதலிக்கும் போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், அஜித் கைது செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.