சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை:சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் உறுப்பினர்களின் கோரிக்கைகள், கேள்விகளுக்கு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவிகள்இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3-5 வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1,000-ம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கான வழிமுறைகள் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்டு, இத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மட்டுமின்றி, மாநில அளவிலும் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா டிச.18-ம் தேதி கொண்டாடப்படும்.

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையால் வாடாமல் இருக்கும் வகையில், அக்குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.