பாஜக, சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல்.. கிரித் சோமையாவின் கார்மீது கல்வீச்சு

மும்பையில் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே இரவில் மோதல் வெடித்தது. பாஜக தலைவர் கிரித் சோமையா தாம் தாக்கப்பட்டதாகக் கூறி பாந்த்ரா காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

சுமார் 70-80 சிவசேனா தொண்டர்கள் புகார் தெரிவிக்க சென்ற தம்மீதும் Khar காவல் நிலையத்தின் மீதும் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் தமது காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் கிரித் சோமையா தெரிவித்துள்ளார்.

அவர் மீதான தாக்குதலைக் கண்டித்து இரவில் பாஜகவினர் பாந்த்ரா காவல் நிலையத்தை கட்சிக் கொடிகளுடன் முற்றுகையிட்டனர் இத்தாக்குதலுக்கு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.