மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வரும் 27-ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து இம்மாத தொடக்கத்தில் தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழாக பதிவாகியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரமாக அமலுக்கு வந்துள்ளன.
image
இந்த சூழலில், வரும் 27ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, மாநில அளவில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிய உள்ளார். மேலும், கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.