120 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகுகள் துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்து.. 12 பேர் பரிதாபமாக பலி.!

மத்தியதரைக்கடல் வழியாக 120 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகுகள் துனிசியா அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணிக்கும் மக்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் அடிக்கடிக்கடி விபத்தில் சிக்கி வாழ்வை இழக்கின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து 120 பேருடன் சென்ற 4 படகு Sfax கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.

12 பேரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 10 பேரை மீட்புக் குழு தேடி வருகிறது. கடலில் தத்தளித்த 98 பேரை துனிசிய கடற்படையினர் மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.