கோவையில் சாலையில் அசுர வேகத்தில் சென்ற இரு சக்கர வாகனம் சுவற்றின் மீது மோதியதில் 2 பேர் பலி.!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலையில் அசுர வேகத்தில் சென்ற இரு சக்கர வாகனம் சுவற்றின் மீது பயங்கரமாக மோதிய சம்பவத்தில் 2பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் ஆகியோர் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் லூர்து சகாயராஜ் என்பவருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் அன்னூர்-சத்தி சாலையில் சென்றுள்ளனர்.

உப்புத்தோட்டம் கட் ரோடு அருகே நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் அதிவேகமாக வந்து சாலையின் ஓரமாக உள்ள பொதுக்கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் கிருஷ்ணசாமி,ஸ்ரீஜித் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பெண் உள்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.