சாலையில் திரும்ப முயன்ற பைக் மீது வேகமாக வந்த மற்றொரு பைக் மோதி விபத்து!

தருமபுரியில் சாலையில் திரும்ப முயன்ற பைக் மீது வேகமாக வந்த மற்றொரு பைக் மோதிய விபத்தில் ஐந்து பேர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மூர்த்தி என்பவர் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு தனது நண்பர் ஸ்ரீராம்குமாருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தருமபுரி தீயணைப்பு நிலையம் அருகே சென்ற அவர்கள் மறுமார்க்கத்திற்கு செல்வதற்காக இண்டிகேட்டரை போட்டு சாலையில் திரும்பியிருக்கின்றனர்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் ஒன்று அங்கிருந்த ஸ்பீடு பிரேக்கரை கவனிக்காமல் அதன் மீது ஏறியது.

ஏறிய வேகத்தில் வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்த பைக் திரும்பிக் கொண்டிருந்த மூர்த்தியின் இருசக்கர வாகனத்தின் மீது பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.