கொரோனா பரவல் அதிகரிப்பு – அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி:
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வௌியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஒரு நாளில் 2 ஆயிரத்து 483 தொற்றுகளுடன், நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,347 உயிரிழப்புகளுடன் மொத்த பலி 5 லட்சத்து 23 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தது. 
இந்நிலையில், நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இதுதொடர்பாக ஒரு அறிக்கை வழங்குவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.