சீனா இலங்கைக்கு மேலும் கடனுதவி

தற்போது நாட்டின் கடனை செலுத்துவதற்கு சீனா மேலும் ஒரு தொகையை கடனாக வழங்கவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை நடத்தி வரும் பேச்சுவார்த்தை தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள கூற்று பாதிப்பை ஏற்படுத்துமா? என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீனா உலக நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. கடன் மறுசீரமைப்பிற்கு சீனா இணக்கம் வெளியிடாமைக்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கியுள்ளார். இலங்கையின் கோரிக்கைக்கு சீனா இணக்கம் வெளியிட்டால், ஏனைய நாடுகளது கோரிக்கைக்கும் இணக்கம் வெளியிட வேண்டிய நிலை சீனாவுக்கு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கடனை திருப்பி செலுத்துவது தொடர்பில் இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானம், நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார முகாமைத்துவத்திற்காக மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.. தற்போதைய பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு நிதி அமைச்சர் பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

4 தொடக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டுக்கு அவசரமாக தேவைப்படுகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.