ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குமா?: சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் அறிவிப்பு


ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யவேண்டும் என பல நாடுகள் நீண்ட நாட்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ஒரு வழியாக ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது.

இன்று, இன்னும் சற்று நேரத்தில் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Christine Lambrecht, ஜேர்மனியிலுள்ள அமெரிக்க இராணுவ தளம் ஒன்றில், 40க்கும் மேலான நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றில், உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்க இருக்கும் ஆயுதங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட இருக்கிறார்.

அவர் விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடிய 50 Gepard anti-aircraft vehicles என்னும் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனி உக்ரைனுக்கு இந்த விமான எதிர்ப்பு வாகனங்களை வழங்குவது தொடர்பாக பிப்ரவரி மாதமே திட்டமிடப்பட்டது என்றாலும், ஜேர்மனியில் புதிதாக பதவியேற்றுள்ள சேன்ஸலர் Olaf Scholz அரசு, அதை தாமதப்படுத்திக்கொண்டே வர, அதனால் நாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.

Scholzஉடைய SPD கட்சி, ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகள் கொண்ட கட்சியாகும். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கினால், உக்ரைன் வீரர்கள் அவற்றைப் பயன்படுத்த பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும், ஜேர்மனியிடம் ஆயுதங்கள் விற்பனைக்கு இல்லை என்றும், ஆயுதங்களை விற்பது புடினை கோபப்படுத்தும் என்றும் பல்வேறு காரணங்கள் கூறிவந்தது அக்கட்சி.

ஆனால், ஜேர்மனியின் சர்வதேச கூட்டணி நாடுகளும், உள்நாட்டுக் கூட்டணிக் கட்சிகளும் கொடுத்த அழுத்தம் தாங்காமல், தற்போது Scholz உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது போல் தெரிகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.