நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட் – விரைவில் பாக். திரும்புகிறார்!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிய பாஸ்போர்ட் வழங்கி உள்ளது.

அண்டை நாடான
பாகிஸ்தான்
பிரதமராக 2013 – 2017 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப், 71. பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் நீதிமன்றம் இவருக்கு சிறை தண்டனை விதித்து இருந்தது. மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, நான்கு வாரங்களுக்கு பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்ல லாகூர் நீதிமன்றம் இவருக்கு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அவரது விசா காலத்தை நீட்டிக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.

பாகிஸ்தானில் தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட் ஒன்றை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு வழங்கி உள்ளது.

உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்!

இதன்படி, வருகிற 2032 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 10 ஆண்டுகளுக்கு இந்த புதிய பாஸ்போர்ட் செல்லுபடியாகும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் காலாவதியான பின்பு, இம்ரான் கான் அரசு அதனை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

பாகிஸ்தான் நாட்டிற்கு வர பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில்,
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
விரைவில் லண்டனில் இருந்து தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரம்ஜான் பண்டிகையை பாகிஸ்தானில் கொண்டாடவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.