பூமியை நெருங்கும் சிறுகோள்: பாதிப்பை ஏற்படுத்துமா? கண்காணிக்கும் நாசா

நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள்.

பூமியை பல்வேறு சிறுகோள்கள் அவ்வப்போது தாக்கிவந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் ஒரே அடியில் கிரகத்தில் உள்ள பெரும்பாலான உயிரினங்களை அழித்துவிட்டது. 

அந்த சிறுகோள் மோதலானது டைனோசர்கள் உட்பட பல உயிரினங்களை பூண்டோடு ஒழித்துவிட்டது. அந்த மாபெரும் அழிவுக்கு பிறகுதான் உலகில் பாலூட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்தது.

மேலும் படிக்க | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்

டைனோசர்களை அழித்த அளவு சக்தி கொண்ட மற்றொரு சிறுகோள் இதுவரை பூமியைத் தாக்காததால், நாம் இன்றும் மனித இனங்களில் ஒருவராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் அவ்வப்போது பிரபஞ்சத்தில் இருந்து பாறைகள் பூமியைக் கடந்து செல்கின்றன. அவற்றை உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஏஜென்சிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

பூமியின் சுற்றுவட்டாரப் பகுதிக்குள் மிகப்பெரிய சிறுகோள் ஒன்று வரவுள்ளதாக தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளுக்கு 418135 (2008 AG33) என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு

இந்த சிறுகோள் அபாயகரமான சிறுகோள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 450 மீட்டர் அகலம் கொண்ட இந்த சிறுகோள், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது அப்பல்லோ வகுப்பு சிறுகோள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் வியாழக்கிழமை (2022 ஏப்ரல் 28) பூமியை நெருங்கி வர உள்ளது.

பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், சிறுகோள் பூமியை பெரிய அளவில் தாக்கப் போவதில்லை என்பது நல்ல செய்தி. உண்மையில் இந்த சிறுகோள், பூமியை நேருக்கு நேர் தாக்கினால், பூமியில் பரவலான அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு இது போதுமான சக்தியை கொண்டிருக்கிறது.

இந்த அபாயகரமான சிறுகோள், பூமியில் இருந்து 3,240,000 கிலோமீட்டர் தொலைவில் பறக்கும். இது மிகவும் அதிகமான தொலைவாயிற்றே, இதற்காகவா இவ்வளவு எச்சரிக்கை என்று நினைக்கலாம். பூமியில் இது மிகப் பெரிய தொலைவாக இருக்கலாம்.
ஆனால் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்  3,240,000 கிலோமீட்டர் என்பது மிகவும் குறைவான தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட் 

சிறுகோள் (Asteroid) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போன்றவை, ஆனால் இவை கோள்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியவை.

வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பெரிய பாறைகள் சிறுகோள்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. 
இவை சூரியனை சுற்றி வருபவை என்றாலும், கிரகங்களின் ஈர்ப்பு விசையால் அவற்றின் சுற்றுப்பாதைகள் அவ்வப்போது மாறும்.

இவை ஏதேனும் ஒரு கிரகத்துடன் மோதும் போது பேரழிவை ஏற்படுத்தும். அதனால்தான், 150 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட சிறுகோள் பூமியை நெருங்கும்போது, அதை அபாயகரமான சிறுகோள் என்று வகைப்படுத்தும் நாசா, அதை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது 

மேலும் படிக்க | இது செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியனின் அரிய புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.