முன்னாள் கவர்னருக்கு மக்கள் அஞ்சலி| Dinamalar

பாலக்காடு : கேரளா காங்., மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னருமான சங்கரநாராயணன்,89, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார்.பாலக்காடு சேகரிபுரத்திலுள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு காலமானார். உடல் நேற்று மதியம் 2 மணி வரை வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் திருச்சூர் மாவட்டம், செறுதுருத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது.முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் ராஜேஷ், அமைச்சர் கிருஷ்ணன்குட்டி மற்றும் பல்வேறு துறையினர், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.