மே. 4-ம் தேதி ஒத்திவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புது டில்லி: எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை மே. 4 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் மிகப்பெரும் பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை இறுதி செய்வதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது.

எல்.ஐ.சி., பொதுப் பங்கு வெளியீடு மூலம் அந்நிறுவனத்திலுள்ள 5 சதவீத பங்குகளை அரசு விற்க உள்ளது. இதன் மூலம் ரூ.65,000 முதல் 70,000 கோடி திரட்ட இருந்தது. கடந்த மார்ச் மாதத்திற்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருந்தனர். பிப்ரவரியில் ரஷ்யா – உக்ரைன் போரினால் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. கடுமையான ஏற்ற இறக்கத்துடன் சந்தை காணப்பட்டதால் அந்த சமயத்தில் நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீட்டை அனுமதிப்பது நஷ்டத்தையே ஏற்படுத்தும் என எண்ணி ஒத்தி வைத்தனர்.

latest tamil news

இந்நிலையில் பொதுபங்குவெளியீடு செய்ய தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இதன் படி வரும் பங்கு வெளியீடு மே 4-ம் தேதி துவங்கி மே.9 தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5 சதவீத பங்குகள் மூலம் ரூ. 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக

எல்.ஐ.சி., நிறுவனத்தினை ரூ.15 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யுமாறு செபியிடம் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மே 12 க்குள் பங்கு வெளியீட்டினை மேற்கொள்ளலாம். அந்த கால அளவை தாண்டினால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே பங்கு வெளியீட்டு தேதியை இறுதி செய்வதில் தீவிரம்காட்டப்பட்டுவந்த நிலையில், மே.4-ம் தேதி வெளியிட முடிவு செய்ய்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.