விரைவில்.. சசிகலா வெளியிட்ட அறிவிப்பு.. உற்சாகத்தில் சசிகலா ஆதரவாளர்கள்.! கலக்கத்தில் அதிமுகவினர்.!!

சசிகலா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால், மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதனிடையே சசிகலா ஆன்மீகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால், அதிமுகவில் சசிகலாவை இணைய விடமாட்டோம் என எடப்பாடிபழனிசாமி தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில், சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலா விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு செய்வேன் என தெரிவித்துள்ளார். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.