வேடசந்தூர் அருகே நகைக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு திருட முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நகைக் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அய்யலூர் ரயில் நிலைய சாலையில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான நகைக் கடையில், 3 மர்மநபர்கள் நள்ளிரவில் சுவற்றை பெயர்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

சுவற்றை துளையிடும் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவல் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து கொள்ளையர்களை பிடிக்க துரத்திச் சென்றனர்.

மூன்று கொள்ளையர்களில் ஒருவனை மடக்கி பிடித்தனர். பின்னர் மற்ற இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.