500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1லட்சம் மானியம் – 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு…

சென்னை: 500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு புதிய ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாப்பு வழங்கப்படும் என்ற  சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், பேரவையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், ரூ.97.55 கோடியில் 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்  என்றும், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்பின் பேசிய அமைச்சர்,  திமுக ஆட்சியில் வேலை வாய்ப்பிற்கு பஞ்சமில்லை, எத்தனை இளைஞர்கள் படித்தாலும் அனைவருக்கும் முதலமைச்சர் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார். ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.