இந்தியாவில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒருசேர அமைய சாத்தியமில்லை: ராகுல் காந்தி

புது டெல்லி:
இந்தியாவில் தங்களது வர்த்தகத்தை நிறுத்திய சர்வதேச நிறுவனங்களை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒருசேர நிகழ சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சூழலால் 7 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டன. 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 84,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
2017ம் ஆண்டு செவ்ரோலெட் வெளியேறியது. 2018-ல் மேன் டிரக்ஸ் வெளியேறியது. 2019-ல் ஃபியாட் மற்றும் யுனைட்டெட் மோட்டார்ஸும், 2020-ல் ஹார்லி டேவிட்ஸனும், 2021-ல் ஃபோர்டும், 2022-ல் டாட்ஸன் நிறுவனமும் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளன.
மோடி அவர்களே, இந்தியாவில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒருசேர அமைய வாய்ப்பில்லை. இந்தியாவை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சனையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.